அதிரை மக்கள் அதிர்ச்சி.. தீவிர இந்துத்துவ அமைப்பின் ஆதரவை ஏற்ற பட்டுக்கோட்டை திமுக வேட்பாளர் அண்ணாதுரை

Editorial
0

 


பட்டுக்கோட்டை, 6 ஏப்ரல் 2024

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அண்ணாதுரை எம்.எல்.ஏ., தீவிர இந்துத்துவ கொள்கைகளைக் கொண்ட 'காவி புலிப்படை' என்ற அமைப்பின் ஆதரவை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பட்டுக்கோட்டை தொகுதி தி.மு.க. வேட்பாளர் அண்ணாதுரை எம்.எல்.ஏ.-வை, காவி புலிப்படை நிறுவனத் தலைவர் புலவஞ்சி சி.பி.போஸ் அண்மையில் நேரில் சந்தித்தார். அப்போது அவர், வேட்பாளர் அண்ணாதுரைக்கு தங்கள் அமைப்பின் முழு ஆதரவைத் தெரிவித்தார். முன்னதாக இவர் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியையும் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியானதை அடுத்து, இந்த கூட்டணி குறித்து பெரும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தி.மு.க. தனது கொள்கைகளில் இருந்து முற்றிலும் விலகிவிட்டதாகவும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கொள்கை முரண்பாடு கொண்ட கட்சிகளுடனும், அமைப்புகளுடனும் கைகோர்ப்பதாகவும் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். பெரியார் கொள்கைகளை பேசும் தி.மு.க., தீவிர இந்துத்துவ கொள்கையுடைய அமைப்புகளின் ஆதரவை ஏற்றுக்கொள்வது ஏமாற்றும் செயலாகும்.

காவி புலிப்படை என்பது தீவிரமான இந்துத்துவக் கொள்கைகளை முன்னிறுத்தும் ஒரு வலதுசாரி அமைப்பாகும். குறிப்பாக, தி.மு.க. மற்றும் அதன் தலைவர்களை கடுமையாக விமர்சிப்பதோடு, பல்வேறு சந்தர்ப்பங்களில் தி.மு.க. தலைவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்து, அக்கட்சிக்கு எதிராக தொடர் கண்டனங்களை பதிவு செய்து வரும் அமைப்பு இதுவாகும்.


ஆதாரம்: https://youtu.be/o25y8wtO37M?si=VNl8ilMvzGak2F9i 


தங்களை கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையாக எதிர்க்கும் ஒரு தீவிர இந்துத்துவ அமைப்பின் ஆதரவை, தி.மு.க. வேட்பாளர் எவ்வித தயக்கமுமின்றி ஏற்றுக்கொண்டிருப்பது அக்கட்சியின் இரட்டை நிலைப்பாட்டையும், சந்தர்ப்பவாத அரசியலையும் அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளது.


பெரியாரின் கொள்கைகளையும், சமூக நீதியையும் பேசுவதாகக் கூறிக்கொள்ளும் தி.மு.க., தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கொள்கை முரண்பாடு கொண்ட தீவிர மதவாத சக்திகளுடன் கைகோர்ப்பது ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவாலாகவே பார்க்கப்படுகிறது. ஒருபுறம் சிறுபான்மை மக்களிடம் வாக்கு சேகரித்துக்கொண்டே, மறுபுறம் அவர்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட அமைப்புகளுடன் உறவு பேணுவது, சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் துரோகச் செயலாகும்.

தேர்தல் வெற்றிக்காக எந்த எல்லைக்கும் சென்று யாருடன் வேண்டுமானாலும் சமரசம் செய்துகொள்ளலாம் என்ற தி.மு.க.வின் இந்த சந்தர்ப்பவாத போக்கு, அக்கட்சியின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. சிறுபான்மையின மக்களின் நம்பிக்கையை குழிதோண்டிப் புதைத்துள்ள இந்த விவகாரத்தில், தி.மு.க. தலைமை மவுனம் சாதிப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...